sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

அர்ஷ்தீப் சிங் 'நம்பர்-8': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

/

அர்ஷ்தீப் சிங் 'நம்பர்-8': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

அர்ஷ்தீப் சிங் 'நம்பர்-8': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

அர்ஷ்தீப் சிங் 'நம்பர்-8': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்


ADDED : அக் 09, 2024 11:02 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பவுலர் தரவரிசையில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 8வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 642 புள்ளிகளுடன் 16வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் நோர்க்யாவுடன் 8 வது இடத்தை பகிர்ந்த கொண்ட இவர், வங்கதேசத்துக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் 3 விக்கெட் சாய்த்தார்.

தமிழக சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் (546) 39வது இடத்தில் இருந்து 35வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் அடில் ரஷித் (721 புள்ளி) உள்ளார்.

பேட்டர் தரவரிசையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (807) 'நம்பர்-2' இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (749) ஒரு இடம் பின்தங்கி, 5வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (881) தொடர்கிறார்.

பாண்ட்யா 'நம்பர்-3': 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (216) 7வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில், 16 பந்தில் 39 ரன் விளாசிய இவர், ஒரு விக்கெட் சாய்த்தார். முதலிடத்தை இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன் (253) தக்கவைத்துக் கொண்டார்.






      Dinamalar
      Follow us