/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: பார்வையற்றோர் 'டி-20' உலக கோப்பையில்
/
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: பார்வையற்றோர் 'டி-20' உலக கோப்பையில்
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: பார்வையற்றோர் 'டி-20' உலக கோப்பையில்
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: பார்வையற்றோர் 'டி-20' உலக கோப்பையில்
ADDED : நவ 12, 2025 10:34 PM

புதுடில்லி: பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா, இலங்கையில், பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
இரண்டாவது போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு தீபிகா (91 ரன், 58 பந்து), புலா சரேன் (54* ரன், 22 பந்து) கைகொடுத்தனர். 52 உதிரி ரன் வழங்கிய ஆஸ்திரேலியா, 'பெனால்டி' மூலம் 26 ரன் வழங்கியது. இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 209 ரன் குவித்தது.
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 57 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் தீபிகா தட்டிச் சென்றார்.
மற்றொரு லீக் போட்டியில் நேபாளம் அணி (88/1, 5.2 ஓவர்) 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை (87/8, 20 ஓவர்) வென்றது.

