/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வலிமையாக மீண்டு வருவோம்: கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை
/
வலிமையாக மீண்டு வருவோம்: கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை
வலிமையாக மீண்டு வருவோம்: கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை
வலிமையாக மீண்டு வருவோம்: கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை
UPDATED : அக் 20, 2024 11:22 PM
ADDED : அக் 19, 2024 10:48 PM

பெங்களூரு:
மழையால் பாதிக்கப்பட்ட கான்பூர் டெஸ்டில் (எதிர், வங்கதேசம்) அதிரடியாக பேட் செய்த இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும் அதிவேகமாக ரன் சேர்த்தது. இம்முறை வெற்றி கிடைக்கவில்லை.
இது பற்றி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''ஒரு போட்டியின் முடிவை வைத்து எங்களது அணுகுமுறை மாறாது. துணிச்சலான பேட்டிங் தொடரும். இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோற்றோம். பின் தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெற்றோம். இது போல தோல்வியில் இருந்து வலிமையாக மீண்டு வருவோம்.
பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 46 ரன்னுக்கு சுருண்டு விடுவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த மூன்று மணி நேர ஆட்ட அடிப்படையில் இந்திய வீரர்களை மதிப்பீடு செய்வது சரியல்ல. இரண்டாவது இன்னிங்சில் தரமாக பேட் செய்தோம். இப்போட்டியில் சிறிய தவறுகள் செய்ததால், பெரிய விளைவை சந்தித்தோம். இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்.
முழங்கால் பகுதியில் 'ஆப்பரேஷன்' செய்துள்ள ரிஷாப் பன்ட், ஓடி ரன் எடுக்க சிரமப்பட்டார். இவர் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது,''என்றார்.

