sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சமாரி சதம்: இலங்கை வெற்றி

/

சமாரி சதம்: இலங்கை வெற்றி

சமாரி சதம்: இலங்கை வெற்றி

சமாரி சதம்: இலங்கை வெற்றி


ADDED : ஜூலை 22, 2024 11:08 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தம்புலா: கேப்டன் சமாரி சதம் விளாச, இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, மலேசியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தப்பத்து, 69 பந்தில் 119 ரன் (7 சிக்சர், 14 பவுண்டரி) விளாசினார். ஹர்ஷிதா (26), அனுஷ்கா சஞ்ஜீவனி (31) ஓரளவு கைகொடுத்தனர். இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய மலேசிய அணி 19.5 ஓவரில் 40 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. அதிகபட்சமாக எல்சா ஹன்டர் 10 ரன் எடுத்தார். இலங்கை சார்பில் ஷசினி கிம்ஹானி 3, காவ்யா, கவிஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இலங்கை, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது.

முதல் வீராங்கனை

இலங்கை கேப்டன் சமாரி (119), ஆசிய கோப்பை அரங்கில் சதம் விளாசிய முதல் வீராங்கனையானார். தவிர, ஒரு இன்னிங்சில் தனது அதிபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 113 ரன் (சிட்னி, 2019) எடுத்திருந்தார்.



இந்தியா-நேபாளம் மோதல்

'ஏ' பிரிவு இன்று நடக்கும் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட்டியில் பாகிஸ்தான், யு.ஏ.இ., அணிகளை வீழ்த்திய இந்தியா, மீண்டும் அசத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழையலாம். யு.ஏ.இ., அணியை வென்ற நேபாளம், பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

வங்கதேசம் அபாரம்

மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், தாய்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தாய்லாந்து அணிக்கு நட்டாயா (40) கைகொடுக்க, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 96 ரன் எடுத்தது. வங்கதேச அணிக்கு முர்ஷிதா (50) அரைசதம் விளாச, 17.3 ஓவரில் 100/3 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us