sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பெங்களூருவில் சுப்மன் கில் * ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக...

/

பெங்களூருவில் சுப்மன் கில் * ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக...

பெங்களூருவில் சுப்மன் கில் * ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக...

பெங்களூருவில் சுப்மன் கில் * ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக...


ADDED : ஆக 30, 2025 10:59 PM

Google News

ADDED : ஆக 30, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி-20' தொடர் (செப். 9-28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. செப். 14ல் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இதற்கான இந்திய அணி துணைக் கேப்டனாக, சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். தவிர, துலீப் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக களமிறங்க இருந்தார். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துலீப் டிராபியில் இருந்து விலகினார். இதில் இருந்து மீண்ட சுப்மன், மொகாலியில் 'ஜிம்' பயிற்சியில் ஈடுபட்டார்.

இதனிடையே தொடர்ச்சியான மழை, போதிய பயிற்சி வசதி இல்லாத நிலையில் சுப்மன், உள்ளிட்ட இந்திய அணியின் பல வீரர்கள், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு முன்னதாக வருகை தந்தனர். இங்கு வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

தவிர ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட இந்திய அணியினர் பெங்களூருவில் உள்ளனர். வரும் செப். 4ல் இந்திய அணியினர் துபாய் கிளம்பிச் செல்கின்றனர். மறுநாள் முதல் (செப். 5) பயிற்சியை துவக்குகின்றனர்.

இரவு 8:00 மணிக்கு...

ஐக்கிய அரபு எமிரேட்சில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக, ஆசிய கோப்பை தொடரின் 18 போட்டிகள் அரைமணி நேரம் தாமதமாக, இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு துவங்கும். எமிரேட்ஸ்-ஓமன் மோதும் ஒரு போட்டி மட்டும் மாலை 5:30க்கு துவங்கும்.






      Dinamalar
      Follow us