/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சேப்பாக்கம் ஆடுகளம் 'நம்பர்-1' * ஐ.சி.சி., பாராட்டு
/
சேப்பாக்கம் ஆடுகளம் 'நம்பர்-1' * ஐ.சி.சி., பாராட்டு
சேப்பாக்கம் ஆடுகளம் 'நம்பர்-1' * ஐ.சி.சி., பாராட்டு
சேப்பாக்கம் ஆடுகளம் 'நம்பர்-1' * ஐ.சி.சி., பாராட்டு
ADDED : நவ 09, 2024 12:03 AM

துபாய்: 'சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம், 'அவுட் பீல்டு' சிறப்பாக இருந்தது' என ஐ.சி.சி., பாராட்டியுள்ளது.
இந்திய மண்ணில் கடைசியாக நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளின் ஆடுகளம், மைதானம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) மதிப்பீடு செய்துள்ளது. இதன் படி இந்தியா-வங்கதேசம் மோதிய முதல் டெஸ்ட் நடந்த சென்னை, சேப்பாக்கம் மைதானம், ஆடுகளம் மிகச்சிறப்பாக இருந்தது என தெரிவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு, சின்னசாமி மைதானம், புனே, மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், மும்பை, வான்கடே மைதானம் திருப்தியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
கான்பூர் சரியில்லை
இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் நடந்த கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தின் 'அவுட் பீல்டு' திருப்திகரமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி., சார்பில் மைதானம் குறித்த ஆய்வுக்குப் பின் சிறப்பு, திருப்தி, திருப்தி இன்மை, 'அன் பிட்' (தகுதி இல்லை) என நான்கு பிரிவுகளாக மதிப்பிடப்படுகிறது. திருப்தி இல்லை என்றால் 1, 'அன் பிட்' எனில் 3 தகுதி இழப்பு புள்ளி வழங்கப்படும். 5 ஆண்டில் 5 அல்லது அதற்கும் மேல் தகுதி இழப்பு புள்ளி பெற்றால், அந்த மைதானத்தில் 12 மாதம் போட்டி நடத்த தடை விதிக்கப்படும். தற்போது கான்பூர் மைதானத்துக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

