sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ராகுல் மாற்றமா...ஏமாற்றமா * ஸ்ரீகாந்த் விளாசல்

/

ராகுல் மாற்றமா...ஏமாற்றமா * ஸ்ரீகாந்த் விளாசல்

ராகுல் மாற்றமா...ஏமாற்றமா * ஸ்ரீகாந்த் விளாசல்

ராகுல் மாற்றமா...ஏமாற்றமா * ஸ்ரீகாந்த் விளாசல்


ADDED : அக் 21, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுலை 6வது இடத்தில் களமிறக்கியது தவறு,'' என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா தோற்றது.

தவறான முடிவு

இந்த தோல்விக்கு பேட்டிங் வரிசை குளறுபடி முக்கிய காரணம். 9 ஓவரில் 25/3 என தவித்த நிலையில், 5வது இடத்தில் ராகுல் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அக்சர் படேலை களமிறக்கினர். ஷ்ரேயஸ் அவுட்டானதும் 6வது இடத்தில் களமிறக்கப்பட்டார் ராகுல். தரமாக ஆடிய இவர் எல்லிஸ் ஓவரில் 2 பவுண்டரி, மாத்யூ ஷார்ட் ஓவரில் இரு சிக்சர் பறக்கவிட்டார். 31 பந்தில் 38 ரன் எடுத்து இந்தியா சார்பில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதே போல இடது கை பேட்டர் வாஷிங்டன் சுந்தருக்கு (10 பந்தில் 10 ரன்) பின் 8வது இடத்தில் 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமாரை களமிறக்கி அதிர்ச்சி அளித்தனர். கடைசி ஓவரில் 2 சிக்சர் அடித்த நிதிஷ், 11 பந்தில் 19 ரன் எடுத்தார். சரியான இடத்தில் சரியான வீரர் வந்திருந்தால், இந்தியா 160 ரன் குவித்து, ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். இந்த தவறை அடிலெய்டு போட்டியில் சரி செய்ய வேண்டும்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறுகையில்,''ராகுல் 'கிளாஸ்' வீரர். 4,5வது இடத்தில் அதிக ரன் குவித்துள்ளார். துவக்க வீரராகவும் அசத்தியுள்ளார்.

பெர்த்தில் இவருக்கு முன்னதாக அக்சர் படேலை களமிறக்கியது சரியல்ல. நான் கேப்டனாக இருந்திருந்தால், ராகுலை 4வது இடத்தில் அனுப்பியிருப்பேன். 6வது இடத்தில் களமிறக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது, இந்திய அணி நிர்வாகத்தின் தவறான முடிவு. நான் அக்சர் மீது குற்றம்சுமத்தவில்லை. ராகுலை 5வது இடத்தில் களமிறக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். உலகத் தரம் வாய்ந்த வீரரான இவருக்கு அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். ஷ்ரேயசிற்கு முன்னதாக ராகுல் வருவதே சிறந்தது.

அக்சர், ராகுல் அவுட்டானதும் அதிரடி வீரரான 'ஆல் - ரவுண்டர்' நிதிஷ் குமாரை களமிறக்கியிருக்க வேண்டும். 'இடது-வலது கை' கூட்டணி என்ற பெயரில் இவரை பின்னதாக களமிறக்கி இன்னொரு தவறு செய்தனர்,''என்றார்.

அனைத்து இடத்திலும்...

ஒருநாள் அரங்கில் ராகுல் துவக்க வீரராக 16 போட்டியில் 2 சதம், 5 அரைசதம் உட்பட 669 ரன் (சராசரி 47.78 ரன்), 4வது இடத்தில் 13 போட்டிகளில் 2 சதம், 3 அரைசதம் உட்பட 558 ரன் (சராசரி 55.80), 5வது இடத்தில் 31 போட்டியில் 2 சதம், 9 அரைசதம் உட்பட 1299 ரன் (சராசரி 56.47) எடுத்துள்ளார். 6வது இடத்தில் 9 போட்டியில் 232 ரன் (46.40 ) மட்டுமே எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் 'வேகப்புயல்' மெக்ராத் கூறுகையில்,''பேட்டிங் வரிசையில் ராகுலை அனைத்து இடத்திலும் இந்திய அணி களமிறக்குகிறது. துவக்கம் முதல் பின்வரிசை வரை விளையாடுவது கடினம். இது சில நேரங்களில் இவரது தன்னம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்,''என்றார்.






      Dinamalar
      Follow us