sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

106 ரன்னில் சுருண்டது தமிழகம் * ரஞ்சி கோப்பையில் ஏமாற்றம்

/

106 ரன்னில் சுருண்டது தமிழகம் * ரஞ்சி கோப்பையில் ஏமாற்றம்

106 ரன்னில் சுருண்டது தமிழகம் * ரஞ்சி கோப்பையில் ஏமாற்றம்

106 ரன்னில் சுருண்டது தமிழகம் * ரஞ்சி கோப்பையில் ஏமாற்றம்


ADDED : ஜன 30, 2025 11:00 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாம்ஷெட்பூர்: ரஞ்சிக் கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி 106 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 'டி' பிரிவில் பங்கேற்ற 6 போட்டியில் தலா 3 வெற்றி, 3 'டிரா' செய்த தமிழக அணி 25 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ஜார்க்கண்ட்டை சந்திக்கிறது. இதில் 'டிரா' செய்தால், காலிறுதி உறுதி என தமிழகம் களமிறங்கியது.

'டாஸ்' வென்ற இஷான் கிஷான் தலைமையிலான ஜார்க்கண்ட் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. ஷரண்தீப் (52), அனுகுல் (46) உதவினர். இஷான் கிஷான் (7) கைவிட, ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழக கேப்டன் சாய் கிஷோர், அஜித் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

பின் களமிறங்கிய தமிழக அணி ஒரு கட்டத்தில் 66/2 என இருந்தது. பின் திடீரென சரிந்த தமிழக அணி அடுத்து 40 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்சில் 106 ரன்னில் சுருண்டு, 79 ரன் பின்தங்கியது.

முதல் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி இரண்டாவது இன்னிங்சில் 5/1 ரன் எடுத்து, 84 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

ஷர்துல் 'ஹாட்ரிக்'

மும்பையில் நடக்கும் போட்டியில் ('ஏ') மும்பை, மேகாலயா மோதுகின்றன. முதலில் களமிறங்கிய மேகாலயா, 2 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்தது. பின் முதல் இன்னிங்சில் மேகாலயா 86 ரன்னில் சுருண்டது. முதல் நாள் முடிவில் மும்பை அணி 213/2 ரன் எடுத்து 127 ரன் முன்னிலை பெற்றிருந்தது. மும்பை பவுலர் ஷர்துல் தாகூர், முதல் தர கிரிக்கெட்டில் முதன் முறையாக 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தார். ரஞ்சியில் இச்சாதனை படைத்த 5வது மும்பை வீரர் ஆனார். தவிர, கடந்த போட்டியில் (காஷ்மீர்) சதம் விளாசிய இவர், ஒரு ரஞ்சி சீசனில் சதம், 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ஆனார்.

12,000 ரசிகர்கள்

இந்திய அணி வீரர் கோலி 36. கடந்த 2012க்குப் பின் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காத கோலி, நேற்று டில்லி அணிக்காக ரஞ்சி போட்டியில் களமிறங்கினார். இவரைக் காண, 12,000 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். நேற்று ரயில்வே அணி (241) முதலில் விளையாடியது. இன்று கோலி பேட்டிங் செய்வார் என்பதால் கூடுதல் ரசிகர்கள் வரலாம்.

இதற்கு முன் சச்சின் தனது கடைசி முதல்தர போட்டியில் பங்கேற்ற போது, ஹரியானாவின் லாஹ்லி மைதானத்தில், 8,000 பேர் திரண்டு இருந்தனர்.






      Dinamalar
      Follow us