தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோல்கட்டாவில் பைனல்: கங்குலி நம்பிக்கை

கோல்கட்டாவில் பைனல்: கங்குலி நம்பிக்கை

கோல்கட்டாவில் பைனல்: கங்குலி நம்பிக்கை


ADDED : மே 17, 2025 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா: ''பிரிமியர் தொடருக்கான பைனல் கோல்கட்டாவில் நடக்கும்,'' என, கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.

பிரிமியர் லீக் 18வது சீசனுக்கான தகுதிச் சுற்று-2, பைனல், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மே 23, 25ல் நடக்க இருந்தன. போர் பதட்டம் காரணமாக பிரிமியர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், தகுதிச் சுற்று-2, பைனல் போட்டிகள் வரும் ஜூன் 1, 3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. கோல்கட்டாவில் மழைக்கான வாய்ப்பு இருப்பதால் இவ்விரு போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம். இதுவரை 'பிளே-ஆப்', பைனல் நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில், கோல்கட்டா ரசிகர்கள் சிலர், பைனல் நடக்கும் இடத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஈடன் கார்டன் மைதானத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ''இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), பெங்கால் கிரிக்கெட் சங்கம் இடையே நல்ல நட்பு உள்ளது. பைனலுக்கான இடம் குறித்து பி.சி.சி.ஐ.,யிடம் பேசி உள்ளோம். இப்பிரச்னைக்கு போராட்டம் உதவாது. திட்டமிட்டபடி தகுதிச் சுற்று-2, பைனல், ஈடன் கார்டனில் நடக்கும் என்று நம்புகிறேன். இதற்கு தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us