/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டில்லி கேப்டனுக்கு மீண்டும் அபராதம்
/
டில்லி கேப்டனுக்கு மீண்டும் அபராதம்
ADDED : ஏப் 04, 2024 10:39 PM

விசாகப்பட்டனம்: டில்லி கேப்டன் ரிஷாப் பன்ட்டுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது.
விசாகப்பட்டனத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி (272/7), டில்லி அணியை (166/10) 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்போட்டியில் டில்லி அணி பவுலர்கள் நிர்ணயித்த நேரத்திற்குள் பந்துவீசவில்லை. சென்னை அணிக்கு எதிராகவும் இதுபோல தாமதம் செய்ததால் டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட்டுக்கு, ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது முறையாக விதி மீறியதால் ரிஷாப் பன்ட்டுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தவிர 'இம்பாக்ட்' வீரர் உட்பட டில்லி அணியின் அனைவருக்கும் தலா ரூ. 6 லட்சம் அல்லது சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப் பட்டது.

