sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

வங்கதேச வீராங்கனைக்கு தடை

/

வங்கதேச வீராங்கனைக்கு தடை

வங்கதேச வீராங்கனைக்கு தடை

வங்கதேச வீராங்கனைக்கு தடை


ADDED : பிப் 11, 2025 11:11 PM

Google News

ADDED : பிப் 11, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஷோலே அக்தர் 36. இதுவரை 2 ஒருநாள், 13 சர்வதேச 'டி-20'ல் பங்கேற்றுள்ளார். கடைசியாக 2022, அக்டோபர் 10ல் இலங்கைக்கு எதிரான 'டி-20' போட்டியில் விளையாடினார். கடந்த 2023ல் தென் ஆப்ரிக்காவில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது.

இதற்கான வங்கதேச அணியில் ஷோலே இடம் பெறவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீராங்கனை ஒருவரிடம், 'பிக்சிங்' செய்வது குறித்து 'பேஸ்புக்' வழியாக பேசியுள்ளார். 'ஹிட் அவுட்' ஆனால், ரூ. 14 லட்சம் தருவதாக ஆசை காட்டினார்.

இதை அந்த வீராங்கனை, உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ஊழல் தடுப்பு குழுவிடம் தெரிவித்தார். இதுகுறித்து ஐ.சி.சி., விசாரித்தது. முடிவில்,' போட்டியில் பிக்சிங் செய்ய முயன்றது, இதுகுறித்த விபரங்களை தெரிவிக்க மறுத்தது,' போன்ற காரணங்களுக்காக, கிரிக்கெட் தொடர்பான செயல்களில் ஈடுபட ஷோலேவுக்கு 5 ஆண்டு தடை விதித்தது. 'பிக்சிங்' தொடர்பாக தடை விதிக்கப்பட்ட முதல் சர்வதேச வீராங்கனை ஆனார் ஷோலே.






      Dinamalar
      Follow us