/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆமதாபாத்தில் மழை ஆட்டம்... * பறிபோனது குஜராத் வாய்ப்பு
/
ஆமதாபாத்தில் மழை ஆட்டம்... * பறிபோனது குஜராத் வாய்ப்பு
ஆமதாபாத்தில் மழை ஆட்டம்... * பறிபோனது குஜராத் வாய்ப்பு
ஆமதாபாத்தில் மழை ஆட்டம்... * பறிபோனது குஜராத் வாய்ப்பு
ADDED : மே 13, 2024 11:15 PM

ஆமதாபாத்: கோல்கட்டா, குஜராத் அணிகள் மோத இருந்த ஐ.பி.எல்., போட்டி மழையால் ரத்தானது.
இந்தியாவில் 17 வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் லீக் சுற்று போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று ஆமதாபாத் மோடி மைதானத்தில் கோல்கட்டா, குஜராத் அணிகள் மோத இருந்தன. இதில் வென்றால் மட்டுமே 'பிளே ஆப்' வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் குஜராத் அணி இருந்தது.
ஆனால் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின் மைதானத்தில் தேங்கியிருந்த நீரை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தலா 5 ஓவர் போட்டி நடக்கும் என நம்பப்பட்டது. மீண்டும் மழை வந்ததால், வேறு வழியில்லாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.
இதனால் குஜராத் அணி 13 போட்டியில் 11 புள்ளி மட்டும் பெற்று, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது. கோல்கட்டா அணி ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
மீதமுள்ள மூன்று இடத்தை பிடிக்க ராஜஸ்தான் (16), சென்னை (14), ஐதராபாத் (14), பெங்களூரு (12), டில்லி (12), லக்னோ (12) என 6 அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை (8), பஞ்சாப் (8) அணிகள் வெளியேறி விட்டன.
டில்லி-லக்னோ மோதல்
இன்று நடக்கும் முக்கிய போட்டியில் டில்லி (13ல் 12 புள்ளி), லக்னோ (12ல் 12) அணிகள் மோதுகின்றன. டில்லி (-0.482)அணி வெற்றி பெற்றால், 14 புள்ளி பெறும். ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று தெரியவரும்.
* மோசமான ரன்ரேட் வைத்துள்ள லக்னோ (-0.769), தோற்கும்பட்த்தில், 'பிளே ஆப்' வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வரும்.
* சென்னை (14 புள்ளி, 0.528) தனது கடைசி போட்டியில் (மே 18), பெங்களூருவிடம் (12, 0.387) மோசமாக தோற்காத பட்சத்தில் 'பிளே ஆப்' செல்லலாம்.