sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்

/

வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்

வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்

வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்


ADDED : ஆக 26, 2024 10:46 PM

Google News

ADDED : ஆக 26, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராவல்பிண்டி: முதல் டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய வங்கதேசம், பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்தது. இதில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு அணி பவுலர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி தவறினர். இதனையடுத்து ஐ.சி.சி., சார்பில் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஓவர் தாமதமாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளி குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி, 16 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மூன்று ஓவர் தாமதமாக பந்துவீசிய வங்கதேச அணிக்கு, 3 புள்ளி குறைக்கப்பட்டது. வங்கதேச அணி 21 புள்ளிகளுடன், 7வது இடத்தில் உள்ளது. வங்கதேச வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் நோக்கி வேகமாக பந்தை எறிந்த குற்றத்திற்காக வங்கதேச 'ஆல்-ரவுண்டர்' சாகிப் அல் ஹசனுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இருவருக்கும் ஒரு தகுதி இழப்பு புள்ளி பெற்றனர்.

மாற்றம் நிச்சயம்

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) சேர்மன் மொசின் நக்வி கூறுகையில், ''சமீபத்திய உலக கோப்பையில் ('டி-20') பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு திரும்பிய போது, அணியில் சிறிய மாற்றம் செய்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான மோசமான தோல்விக்கு பின், பெரிய அளவில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன். இது விரைவில் நடக்கும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us