sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ரஞ்சி கோப்பை காஷ்மீர் ஏமாற்றம்

/

ரஞ்சி கோப்பை காஷ்மீர் ஏமாற்றம்

ரஞ்சி கோப்பை காஷ்மீர் ஏமாற்றம்

ரஞ்சி கோப்பை காஷ்மீர் ஏமாற்றம்


ADDED : பிப் 12, 2025 10:24 PM

Google News

ADDED : பிப் 12, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: ரஞ்சி கோப்பை காலிறுதி முதல் இன்னிங்சில் ஒரு ரன் பின்தங்கிய ஜம்மு காஷ்மீர் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

புனேயில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ஜம்மு காஷ்மீர், கேரளா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் காஷ்மீர் 280, கேரளா 281 ரன் எடுத்தன. காஷ்மீர் அணி 2வது இன்னிங்சில் 399/9 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

பின் 399 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கேரளா அணிக்கு கேப்டன் சச்சின் பேபி (48), சல்மான் நிசார் (44*), முகமது அசார் (67*) கைகொடுத்தனர். ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 2வது இன்னிங்சில் 295/6 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் ஒரு ரன் கூடுதலாக பெற்ற கேரளா அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. ரஞ்சி கோப்பை வரலாற்றில் கேரளா அணி 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதற்கு முன் 2018-19 சீசனில் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. காஷ்மீர் அணி பரிதாபமாக வெளியேறியது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய கேரளாவின் சல்மான் நிசார் (112*) ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அரையிறுதியில் (பிப். 17-21) குஜராத்-கேரளா, விதர்பா-மும்பை அணிகள் விளையாடுகின்றன.






      Dinamalar
      Follow us