sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சிக்கலில் ரோகித், சுப்மன் கில்

/

சிக்கலில் ரோகித், சுப்மன் கில்

சிக்கலில் ரோகித், சுப்மன் கில்

சிக்கலில் ரோகித், சுப்மன் கில்


ADDED : பிப் 27, 2025 09:59 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இவ்விரு அணிகள் மோதும் முக்கியத்துவம் இல்லாத கடைசி லீக் போட்டி வரும் மார்ச் 2ல் நடக்க உள்ளது.

இதற்காக, இந்திய அணியினர் நேற்று முன் தினம் இரவு துபாயில் உள்ள ஐ.சி.சி., அகாடமி மைதானத்தில் மின்னொளியில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ரோகித் சர்மா, பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இவரது தொடைப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. காயத்தின் தன்மை கருதி, பயிற்சியை தவிர்த்தார். சக வீரர்களின் பயிற்சியை கண்காணித்தார்.

துணை கேப்டன் சுப்மன் கில், ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை. இவருக்கு உடல்நிலை சரியில்லை. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் தேறி விட வாய்ப்பு உள்ளது. கோலி, காய்ச்சலில் இருந்து குணமடைந்த ரிஷாப் பன்ட், கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி, பயிற்சியில் ஈடுபட்டனர்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். துவக்க வீரராக ராகுல் வரலாம். ரிஷாப் பன்ட் இடம் பெற வாய்ப்பு உண்டு. ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்படலாம்.






      Dinamalar
      Follow us