sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இக்கட்டான நிலையில் தமிழகம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில்

/

இக்கட்டான நிலையில் தமிழகம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில்

இக்கட்டான நிலையில் தமிழகம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில்

இக்கட்டான நிலையில் தமிழகம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில்


ADDED : ஜன 31, 2025 09:12 PM

Google News

ADDED : ஜன 31, 2025 09:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாம்ஷெட்பூர்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி இக்கட்டான நிலையில் உள்ளது.

இந்தியாவில், ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் 185, தமிழகம் 106 ரன் எடுத்தன. முதல் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் 5/1 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் உத்கர்ஷ் சிங் (35), விராத் சிங் (29), குமார் குஷாக்ரா (20) கைகொடுக்க, ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சில் 154 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 4 விக்கெட் சாய்த்தனர்.

பின், 234 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணிக்கு முகமது அலி (44) நல்ல துவக்கம் கொடுத்தார். நாராயண் ஜெகதீசன் (13), பிரதோஷ் ரஞ்சன் பால் (13), ஆன்ட்ரி சித்தர்த் (18), கேப்டன் சாய் கிஷோர் (2) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்திருந்தது. விஜய் சங்கர் (33), அஜித் ராம் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஜார்க்கண்ட் சார்பில் மனிஷி 3 விக்கெட் வீழ்த்தினார்.

தமிழக அணியின் வெற்றிக்கு இன்னும் 97 ரன் தேவைப்படுகிறது. கைவசம் 5 விக்கெட் மட்டும் உள்ள நிலையில், பொறுப்பாக விளையாடினால், காலிறுதிக்கு தகுதி பெறலாம்.

கோலி ஏமாற்றம்டில்லியில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் டில்லி, ரயில்வேஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டில்லி அணிக்காக இந்திய நட்சத்திர வீரர் விராத் கோலி விளையாடுகிறார். 13 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி கோப்பையில் பங்கேற்கும் இவர், 'பேட்' செய்ய களமிறங்கிய போது மைதானத்தில் இருந்து 5000க்கும் மேற்பட்ட ரசிகர்கள், 'கோலி, கோலி' என முழங்கினர். மொத்தம் 15 பந்தில், 6 ரன் மட்டும் எடுத்த கோலி, ரயில்வே அணியின் ஹிமான்ஷு சங்வான் 'வேகத்தில்' போல்டாகி திரும்பினார்.






      Dinamalar
      Follow us