/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வருண் சக்ரவர்த்திக்கு அபராதம்
/
வருண் சக்ரவர்த்திக்கு அபராதம்
ADDED : மே 08, 2025 10:42 PM

கோல்கட்டா: போட்டியில் ஒழுங்கீனமாக நடந்த கோல்கட்டா வீரர் வருண் சக்ரவர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோல்கட்டா, ஈடன் கார்டனில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டாவை வீழ்த்தியது. இப்போட்டியில் 2 விக்கெட் சாய்த்த கோல்கட்டா அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, சென்னை அணி வீரர் பிரவிசை அவுட்டாக்கிய போது மைதானத்தை விட்டு வெளியேறுமாறு சைகை செய்தார்.
பிரிமியர் லீக் 2.5 விதிமுறைப்படி, போட்டியில் எதிரணி வீரரை தகாத வார்த்தையால் திட்டுவது, மோசமாக சைகை செய்து ஆக்ரோஷமாக நடப்பது குற்றமாகும். இதனையடுத்து வருண் சக்ரவர்த்திக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.

