/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
விஜய் சங்கர் சதம்: ரஞ்சியில் தமிழகம் ரன் குவிப்பு
/
விஜய் சங்கர் சதம்: ரஞ்சியில் தமிழகம் ரன் குவிப்பு
ADDED : பிப் 17, 2024 07:45 PM

சேலம்: பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விஜய் சங்கர் சதம் விளாச தமிழக அணி முதல் இன்னிங்சில் 435 ரன் குவித்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் முதல் தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. சேலத்தில் நடக்கும் 'சி' பிரிவு கடைசி லீக் போட்டியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 291/4 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (122), விஜய் சங்கர் (85) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு விஜய் சங்கர் (130) சதம் கடந்து கைகொடுத்தார். மறுமுனையில் அசத்திய பாபா இந்திரஜித் (187) நம்பிக்கை தந்தார். மோகித் ஹரிஹரன் (2), முகமது (8), கேப்டன் சாய் கிஷோர் (20) நிலைக்கவில்லை. தமிழக அணி முதல் இன்னிங்சில் 435 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பஞ்சாப் சார்பில் சுக்விந்தர் சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய பஞ்சாப் அணி ஆட்டநேர முடிவில் 141/4 ரன் எடுத்திருந்தது. நேகல் வதேரா (43), அன்மோல்பிரீத் சிங் (41) ஆறுதல் தந்தனர். தமிழகம் சார்பில் அஜித் ராம் 2, சந்தீப் வாரியர், முகமது அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.