/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா-இங்கிலாந்து மோதல் * பெண்கள் 'உலக' பயிற்சி போட்டியில்...
/
இந்தியா-இங்கிலாந்து மோதல் * பெண்கள் 'உலக' பயிற்சி போட்டியில்...
இந்தியா-இங்கிலாந்து மோதல் * பெண்கள் 'உலக' பயிற்சி போட்டியில்...
இந்தியா-இங்கிலாந்து மோதல் * பெண்கள் 'உலக' பயிற்சி போட்டியில்...
ADDED : செப் 24, 2025 08:09 PM

பெங்களூரு: இந்தியா, இலங்கையில் பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர் (50 ஓவர், செப். 30-நவ. 2) நடக்க உள்ளது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். பைனல் நவ. 2ல் பெங்களூரு அல்லது கொழும்புவில் நடக்கும்.
இந்திய அணி, தனது முதல் போட்டியில் (செப். 30) இலங்கையை சந்திக்கிறது. இதற்குத் தயாராகும் வகையில் செப்டம்பர் 25 முதல், பயிற்சி போட்டிகள் துவங்குகின்றன.
பெங்களூருவில் நடக்கும் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டிகள் இந்திய 'ஏ' அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. கொழும்புவில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோத காத்திருக்கின்றன.