/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வில்வித்தை: தீபிகா குமாரி தோல்வி
/
வில்வித்தை: தீபிகா குமாரி தோல்வி
ADDED : ஜூன் 16, 2024 11:30 PM

அன்டல்யா: வில்வித்தை ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தோல்வியடைந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வில்வித்தை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று துருக்கியில் நடக்கிறது. பெண்கள் தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, அஜர்பெய்ஜானின் ராமசனோவா மோதினர். இதில் ஏமாற்றிய தீபிகா 4-6 (28-26, 27-25, 23-26, 24-25, 27-29) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
முதலிரண்டு சுற்றில் இஸ்ரேலின் ஷெல்லி ஹில்டன், மைக்கேலா மோஷேவை வீழ்த்திய இந்தியாவின் அன்கிதா பகத், 'ரவுண்டு-16' போட்டியில் 6-0 (26-23, 28-22, 28-23) என பிலிப்பைன்சின் கேப்ரியல் மோனிகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை பஜன் கவுர், 'ரவுண்டு-32' போட்டியில் 6-2 (29-27, 28-26, 26-29, 27-24) என மங்கோலியாவின் பிஷிண்டீயை வீழ்த்தினார்.