/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய மல்யுத்தம்: ராதிகா 'வெள்ளி'
/
ஆசிய மல்யுத்தம்: ராதிகா 'வெள்ளி'
ADDED : ஏப் 13, 2024 10:59 PM

பிஷ்கெக்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா (68 கிலோ) வெள்ளி வென்றார்.
கிர்கிஸ்தானில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 68 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராதிகா, கஜகஸ்தானின் அல்பினா மோதினர். இதில் ராதிகா 12-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் ராதிகா 2-0 என கிர்கிஸ்தானின் குல்னுராவை தோற்கடித்தார்.
கடந்த ஆண்டு 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ராதிகா, பைனலில் ஜப்பானின் நோனோகா ஒசாகியை எதிர்கொண்டார். இதில் ராதிகா 2-15 என தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான 50 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஷிவானி பவார், ஜப்பானின் ஜிகி பெங்கிடம் தோல்வியடைந்தார். சீன வீராங்கனை பைனலுக்கு முன்னேறியதால், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு ஷிவானி தகுதி பெற்றார். இதில் ஷிவானி 9-7 என மங்கோலியாவின் டோல்கோர்ஜாவினை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்கள் பிரிவில் நடந்த மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியாவின் தமன்னா (50 கிலோ), புஷ்பா யாதவ் (59 கிலோ), பிரியா (76 கிலோ) பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.

