/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: பைனலில் மீனாட்சி
/
குத்துச்சண்டை: பைனலில் மீனாட்சி
ADDED : மார் 27, 2025 10:51 PM

நொய்டா: தேசிய குத்துச்சண்டையில் மீனாட்சி, அனாமிகா உள்ளிட்டோர் பைனலுக்குள் நுழைந்தனர்.
தேசிய சீனியர் பெண்களுக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 8வது சீசன் உ.பி.,யின் நொய்டாவில் நடக்கிறது. மொத்தம் 188 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 'மினிமம் வெயிட்' (45-48 கிலோ) பிரிவின் நடப்பு சாம்பியன் அகில இந்திய போலீஸ் அணியின் மீனாட்சி, தனது மூன்றாவது போட்டியில் டில்லியின் சஞ்சனாவை வென்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் சிக்கிமின் யாஷிகாவை சந்திக்க உள்ளார்.
'பிளை வெயிட்' (48-51 கிலோ) பிரிவில் ரயில்வே அணியின் அனாமிகா, தமிழகத்தின் கலைவாணியை சந்தித்தார். கடும் போராட்டத்துக்குப் பின் அனாமிகா 4:3 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார். இதில் ஹரியானாவின் தமன்னாவை சந்திக்கிறார்.