sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: லக்சயா ஏமாற்றம்

குத்துச்சண்டை: லக்சயா ஏமாற்றம்

குத்துச்சண்டை: லக்சயா ஏமாற்றம்


ADDED : ஏப் 01, 2025 09:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 09:40 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உலக குத்துச்சண்டை கோப்பை முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சகார் தோல்வியடைந்தார்.

பிரேசிலில் உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் நடக்கிறது. 6 நாள் நடக்கும் இத்தொடரில் 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் கிடைத்த பின் உலக குத்துச்சண்டை அமைப்பு நடத்தும் முதல் தொடர் இது. 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ளது புதிய எடைப் பிரிவுகளில் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முதல் தொடர். தவிர, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இதில் களமிறங்குகின்றனர்.

இந்தியாவின் சச்சின் (60 கிலோ), விஷால் (90) என இருவரும் நேரடியாக அரையிறுதியில் பங்கேற்க உள்ளனர். 80 கிலோ பிரிவு முதல் சுற்றில் தேசிய 'ஹெவிவெயிட்' சாம்பியன் லக்சயா சஹார், உலக சாம்பியன்ஷிப்பில் (2023) வெள்ளி வென்ற பிரேசிலின் வாண்டெர்லி பெரெய்ராவை சந்தித்தார். இதில் லக்சயா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இரண்டாவது நாள் நடக்கும் போட்டியில் இந்தியா சார்பில் ஜடுமணி சிங் (50 கிலோ), நிகில் துபே (75), ஜக்னுா (85) களமிறங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us