sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி

/

ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி

ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி

ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி


ADDED : நவ 26, 2025 10:58 PM

Google News

ADDED : நவ 26, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிளாஸ்கோ: ஆமதாபாத்தில், வரும் 2030ல் காமன்வெல்த் விளையாட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்படுகிறது. கடைசியாக, 2022ல் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது. இதன் 23வது சீசன், அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ளது.வரும் 2030ல், 24வது காமன்வெல்த் விளையாட்டை நடத்திட இந்தியா (ஆமதாபாத்), நைஜீரியா (அபுஜா) நாடுகள் விருப்பம் தெரிவித்தன.

நேற்று, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், போட்டியை இந்தியாவில் நடத்த முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. தவிர, வரும் 2034ல் இப்போட்டியை நடத்தும் உரிமம் ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு நடத்தும் 2வது இந்திய நகரமானது ஆமதாபாத். ஏற்கனவே 2010ல் டில்லியில் நடந்தது. இதற்காக ரூ. 70 ஆயிரம் கோடி செலவானது.






      Dinamalar
      Follow us