/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தீபிகா குமாரி 'வெள்ளி': உலக கோப்பை வில்வித்தையில்
/
தீபிகா குமாரி 'வெள்ளி': உலக கோப்பை வில்வித்தையில்
ADDED : அக் 21, 2024 11:01 PM

ட்லாக்ஸ்கலா: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி வென்றார்.
மெக்சிகோவில், உலக கோப்பை வில்வித்தை பைனல் நடந்தது. பெண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி பங்கேற்றார். காலிறுதியில் சீனாவின் யாங் ஜியாவோலீ (6-0), அரையிறுதியில் மெக்சிகோவின் அலெஜான்ட்ரா வாலன்சியாவை (6-4) வீழ்த்திய தீபிகா, பைனலில் சீனாவின் ஜியாமன் லியை எதிர்கொண்டார். இதில் ஏமாற்றிய தீபிகா 0-6 (26-27, 28-30, 25-27) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.
இது, உலக கோப்பை பைனலில் தீபிகாவின் 5வது வெள்ளிப்பதக்கம். ஒன்பதாவது முறையாக உலக கோப்பை பைனலில் பங்கேற்ற தீபிகா, 5 வெள்ளி (2010-2013, 2015, 2024), ஒரு வெண்கலம் (2018) என, 6 பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் டோலா பானர்ஜி (2007) மட்டும் உலக கோப்பை பைனலில் தங்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு காலிறுதியில் இந்தியாவின் திராஜ் 4-6 என தென் கொரியாவின் லீ வூ சியோக்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
இம்முறை இந்தியாவுக்கு ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டும் கிடைத்தது.

