/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜெர்லினுக்கு 'கொடி' கவுரவம்: காது கேளாதோர் ஒலிம்பிக்கில்
/
ஜெர்லினுக்கு 'கொடி' கவுரவம்: காது கேளாதோர் ஒலிம்பிக்கில்
ஜெர்லினுக்கு 'கொடி' கவுரவம்: காது கேளாதோர் ஒலிம்பிக்கில்
ஜெர்லினுக்கு 'கொடி' கவுரவம்: காது கேளாதோர் ஒலிம்பிக்கில்
ADDED : நவ 12, 2025 10:32 PM

புதுடில்லி: பாட்மின்டன் வீராங்கனை ஜெர்லின், காது கேளாதோர் ஒலிம்பிக்கில் இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வரவுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் நவ. 15-26ல் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ('டெப்லிம்பிக்ஸ்') நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் முதன்முறையாக 111 பேர், தடகளம், பாட்மின்டன், கோல்ப், ஜூடோ உள்ளிட்ட 11 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதன் துவக்க விழா அணி வகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை பாட்மின்டன் வீராங்கனை, தமிழகத்தின் ஜெர்லின் அனிகா 21, ஏந்தி வரவுள்ளார். மதுரை சேர்ந்த இவர், 3வது முறையாக (2017, 2022, 2025) ஒலிம்பிக்கில் களமிறங்க உள்ளார். கடந்த 2022ல் பிரேசிலில் நடந்த போட்டியில் அசத்திய இவர், ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவில் தலா ஒரு தங்கம் கைப்பற்றினார். இதனையடுத்து 2022ல் நாட்டின் உயரிய அர்ஜுனா விருதை தட்டிச் சென்றார்.
இதுகுறித்து ஜெர்லின் கூறுகையில், ''இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்ல இருப்பது மிகப் பெரிய கவுரவம். இது, எனது கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன்,'' என்றார்.
கடந்த 2022ல் பிரேசிலில் நடந்த போட்டியில் இந்தியா சார்பில் 65 பேர் பங்கேற்றனர். இதில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 9வது இடம் பிடித்தது.

