/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா மீண்டும் சாம்பியன்: பெண்கள் கபடி உலக கோப்பையில்
/
இந்தியா மீண்டும் சாம்பியன்: பெண்கள் கபடி உலக கோப்பையில்
இந்தியா மீண்டும் சாம்பியன்: பெண்கள் கபடி உலக கோப்பையில்
இந்தியா மீண்டும் சாம்பியன்: பெண்கள் கபடி உலக கோப்பையில்
ADDED : நவ 24, 2025 11:44 PM

தாகா: பெண்கள் கபடி உலக கோப்பையில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 35-28 என, சீனதைபே அணியை வீழ்த்தியது.
வங்கதேச தலைநகர் தாகாவில், பெண்களுக்கான கபடி உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாளம், போலந்து உள்ளிட்ட 10 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.
லீக் சுற்றில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டாவை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் ஈரானை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் சீனதைபே அணி, வங்கதேசத்தை வென்றது.
பைனலில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இந்திய அணி 20-16 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆட்டநேர முடிவில் 25-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2012, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

