sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: மதுரை வந்த 9 அணி வீரர்கள்

/

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: மதுரை வந்த 9 அணி வீரர்கள்

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: மதுரை வந்த 9 அணி வீரர்கள்

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: மதுரை வந்த 9 அணி வீரர்கள்


ADDED : நவ 24, 2025 11:34 PM

Google News

ADDED : நவ 24, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் மதுரையில் நவ. 28 ல் நடக்க உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மதுரை வந்தனர்.

நேற்று (நவ.24) இங்கிலாந்து, நெதர்லாந்து, நமீபியா, தென்னாப்பிரிக்கா ஹாக்கி அணியினர் மதியம் ஒருமணிக்கு மதுரை விமான நிலையம் வந்தனர். மாவட்ட நிர்வாகம், எஸ்.டி.ஏ.டி., ஹாக்கி சங்கங்கள் சார்பில் வெளிநாட்டு வீரர்களுக்கு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவரை அயர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, கனடா, எகிப்து உட்பட 9 நாடுகளைச் சேர்ந்த அணியினர் மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி ஆட்டம்: உலகக்கோப்பை போட்டிக்காக புதிதாக திறக்கப்பட்ட சர்வதேச அரங்கில் காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீரர்கள், அவரவர் வசதிக்கேற்ப நேரத்தை தேர்வு செய்து பயிற்சியில் ஈடுபடுவர். நேற்று பெல்ஜியத்துடன் கனடா அணியும், அயர்லாந்துடன் மலேசியா அணியும் பயிற்சி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. மதியத்திற்கு மேல் கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டு அணியினர் மட்டும் தனித்தனியாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

நவ. 27 வரை பயிற்சி ஆட்டம் நடைபெறும். நவ. 28 காலை 9:00 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

நாளை முதல் கட்டுப்பாடு: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதியில் 140 மாணவர்கள் தங்கி தடகளம், ஹாக்கி உள்ளிட்ட பயிற்சி பெறுகின்றனர். இந்த வீரர்கள் காலை, மாலை இருவேளை பயிற்சி பெறும் நிலையில் நாளை (நவ. 26) முதல் டிச. 12 வரை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஏதாவது ஒரு நேரம் பயிற்சி அளிக்கவோ அல்லது விடுதிக்குள்ளேயே 'பிட்னஸ்' பயிற்சி மட்டும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதால் பாதுகாப்பு கருதி மைதானத்தில் உள்ள பாட்மின்டன், நீச்சல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு வருபவர்களுக்கும் தடை விதிக்கப்படும். ரேஸ்கோர்ஸ் மைதானம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.

பயிற்சியாளர்கள், அதிகாரிகள் வந்து செல்ல நாளை (நவ.26) முதல் டிச. 12 வரை சிறப்பு பாஸ் அனுமதி வழங்கப்படும். பொதுமக்களுக்கு அனுமதியில்லை. 'ஆன்லைன்' மூலம் டிஜிட்டல் அனுமதி பெற்றால் மட்டுமே போட்டியை காண முடியும்.






      Dinamalar
      Follow us