/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்
/
இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்
இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்
இந்தியாவுக்கு 2 பதக்கம்: ஆசிய யூத் பாரா விளையாட்டில்
ADDED : டிச 11, 2025 10:54 PM

துபாய்: ஆசிய யூத் பாரா விளையாட்டு நீச்சல் போட்டியில் இந்திய வீரர் அப்துல் காதிர், ஒரு தங்கம் உட்பட 2 பதக்கம் வென்றார்.
துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய யூத் பாரா விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு (எஸ் 1-5) பைனலில் இலக்கை 40.35 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் அப்துல் காதிர் இந்தோரி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவு (எஸ் 2-7) பைனலில் பந்தய துாரத்தை 43.26 வினாடியில் கடந்த இந்தியாவின் அப்துல் காதிர், 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். தங்கம், வெள்ளிப்பதக்கத்தை உஸ்பெகிஸ்தான் வீரர்கள் தட்டிச் சென்றனர்.
இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் கிடைத்துள்ளது.

