sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்ரீஜேஷிற்கு ரூ. 2 கோடி * கேரளா அரசு அறிவிப்பு

ஸ்ரீஜேஷிற்கு ரூ. 2 கோடி * கேரளா அரசு அறிவிப்பு

ஸ்ரீஜேஷிற்கு ரூ. 2 கோடி * கேரளா அரசு அறிவிப்பு


UPDATED : ஆக 22, 2024 03:57 PM

ADDED : ஆக 21, 2024 10:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2024 03:57 PM ADDED : ஆக 21, 2024 10:47 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷிற்கு கேரள அரசு ரூ. 2 கோடி பரிசு அறிவித்துள்ளது.

பிரான்சில் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆண்கள் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி, 1972க்குப் பின் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் (2021, 2024) வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இதற்கு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என முன்னணி அணிகளை சாய்க்க கைகொடுத்தார். இத்தொடர் முழுவதும் ஜொலித்த இவர், 8 போட்டியில் எதிரணிகள் 12 கோல் மட்டும் அடிக்க விட்டார்.

ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீஜேஷ், இந்திய ஜூனியர் அணி பயிற்சியாளராக செயல்பட காத்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவருக்கு, அம்மாநில அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில்,' பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற வீரர் ஸ்ரீஜேஷ். இவரை பாராட்டும் வகையில், ரூ. 2 கோடி பரிசுத் தொகை தர அரசு முடிவு செய்துள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us