/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் மஹித் சாந்து: 'டெம்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
/
தங்கம் வென்றார் மஹித் சாந்து: 'டெம்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் மஹித் சாந்து: 'டெம்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் மஹித் சாந்து: 'டெம்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
ADDED : நவ 22, 2025 07:25 PM

டோக்கியோ: 'டெம்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மஹித் சாந்து (50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்') தங்கம் வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான 'டெம்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில், இந்தியாவின் மஹித் சாந்து 21, 'டெப்' தகுதிச் சுற்று, 'டெப்லிம்பிக்ஸ்' உலக சாதனையுடன் (585.31 புள்ளி) முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை நடாஷா ஜோஷி (566.12 புள்ளி) 7வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய மஹித், 456.0 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 4வது பதக்கம் (2 தங்கம், 2 வெள்ளி) ஆனது. ஏற்கனவே 10 மீ., 'ஏர் ரைபிள்' அணிகள் பிரிவில் தங்கம் வென்ற இவர், 10 மீ., 'ஏர் ரைபிள்', 50 மீ., 'ரைபிள் புரோன்' தனிநபர் பிரிவில் தலா ஒரு வெள்ளி கைப்பற்றினார்.
நடாஷா ஜோஷி (417.1) 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 14 பதக்கம் கிடைத்துள்ளன.

