/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிராகு செஸ்: அரவிந்த் சாம்பியன்
/
பிராகு செஸ்: அரவிந்த் சாம்பியன்
ADDED : மார் 07, 2025 10:00 PM

பிராகு: பிராகு செஸ் தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடந்தது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.
இதன் 9வது சுற்றில் தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் எடிஸ் குரேல் மோதினர். இதில் அரவிந்த் கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 39வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 40வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் 3 வெற்றி, 6 'டிரா' என 6.0 புள்ளிகளுடன் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இத்தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில் கோப்பை வென்ற 2வது இந்திய வீரரானார் அரவிந்த். ஏற்கனவே 2022ல் ஹரிகிருஷ்ணா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர இது, மிகப் பெரிய தொடரில் அரவிந்த் வென்ற முதல் பட்டம்.
தலா 5.0 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, அனிஷ் கிரி (நெதர்லாந்து), யி வெய் (சீனா) 2வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.