
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: புரோ கபடி லீக் போட்டியில் புனே அணி 60-29 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது.
இந்தியாவில் புரோ கபடி தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நேற்று பாட்னாவில் நடந்த லீக் போட்டியில் புனேரி பல்தான்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 8 வது நிமிடத்தில் தெலுங்கு அணி ஆல் அவுட்டானது. அடுத்த 7 நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாக, முதல் பாதியில் புனே அணி 29-6 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் புனே அணி புள்ளிகளை குவித்தது. முடிவில் புனே அணி 60-29 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. புனே சார்பில் ஆகாஷ் ஷிண்டே 11, மோகித் 8 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.