/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் ஷவுரியா சைனி: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
/
வெள்ளி வென்றார் ஷவுரியா சைனி: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
வெள்ளி வென்றார் ஷவுரியா சைனி: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
வெள்ளி வென்றார் ஷவுரியா சைனி: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில்
ADDED : நவ 21, 2025 10:45 PM

டோக்கியோ: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் (50 மீ., 'ரைபிள் 3-பொசிஷன்ஸ்') இந்திய வீரர் ஷவுரியா சைனி வெள்ளி வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல், 50 மீ., 'ரைபிள் 3-பொசிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷவுரியா சைனி, உலக சாதனையுடன் (584.32 புள்ளி) முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் குஷாக்ரா சிங் ரஜாவத் (575.23) 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
அடுத்து நடந்த பைனலில் ஷவுரியா 450.6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். குஷாக்ரா சிங் (408.8) 6வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
இம்முறை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 13 பதக்கம் கிடைத்துள்ளது.

