ADDED : ஆக 17, 2025 10:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெகா: பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 2வது இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவில், பெகா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, எகிப்தின் ஹபிபா ஹனி மோதினர். அரையிறுதி போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்த அனாஹத், முதல் செட்டை 11-9 என வென்றார். அடுத்த இரு செட்களை 5-11, 8-11 என இழந்த அனாஹத், 4வது செட்டில் 4-10 என பின்தங்கி இருந்த போது காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து எகிப்து வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள அனாஹத், 2வது இடத்துடன் ஆறுதல் அடைந்தார்.