sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சுஷில் குமார் ஜாமின் ரத்து

சுஷில் குமார் ஜாமின் ரத்து

சுஷில் குமார் ஜாமின் ரத்து


ADDED : ஆக 13, 2025 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 10:48 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 42. ஒலிம்பிக்கில் 2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி என இரு பதக்கம் வென்றவர். டில்லி சத்ராசல் மைதானத்தின் மல்யுத்த பயிற்சியாளராக இருந்த சாகர் தங்கர், கொலை வழக்கில் (2021, மே) சிக்கினார். சுஷில் குமார் உட்பட 17 பேர் 2022, அக்டோபர் மாதம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 2023 ஜூலை மாதம் முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற, ஜாமினில் வந்தார். பின் மீண்டும் சிறை சென்றார். வழக்கு தொடர்பாக '186 அரசு சாட்சிகளில் 30 பேர் மட்டும் விசாரிக்கப்பட்டனர்,' என டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட சுஷில் குமார் கடந்த மார்ச் 4ல் மீண்டும் ஜாமினில் வந்தார்.

இதை எதிர்த்து சாகர் தங்கர் தந்தை அசோக் தங்கத், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, சஞ்சய் கரோல் அடங்கிய பெஞ்ச், சுஷில் குமார் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது. ஒருவாரத்தில் இவர் சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us