
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்டு: உலக விளையாட்டு உஷூ போட்டிக்கான பைனலுக்கு இந்திய வீராங்கனை நம்ரதா பத்ரா முன்னேறினார்.
சீனாவில், உலக விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர் (10 வீரர், 7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
பெண்கள் உஷூ போட்டிக்கான 'சாண்டா' 52 கி.கி., பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நம்ரதா பத்ரா, பிலிப்பைன்சின் கிரிசான் பெய்த் கொலாடோ மோதினர். இதில் நம்ரதா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம் இம்முறை இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார்.
பைனலில் நம்ரதா, சீனாவின் மெங்யூ சென் மோதுகின்றனர்.