/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சின்சினாட்டி டென்னிஸ்: காலிறுதியில் சபலென்கா
/
சின்சினாட்டி டென்னிஸ்: காலிறுதியில் சபலென்கா
ADDED : ஆக 14, 2025 10:05 PM

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா உள்ளிட்டோர் முன்னேறினர்.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மனீரோ மோதினர். சபலென்கா 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது, நடப்பு சீசனில் சபலென்காவின் 50வது வெற்றியானது.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-7, 6-4, 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவின் மடிசன் கீசை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-7, 6-3, 3-6 என போலந்தின் மாக்டா லினெட்டிடம் தோல்வியடைந்து வெளியேறினார். டென்மார்க்கின் கிளாரா டாசன் 6-3, 6-7, 4-6 என ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவிடம் தோல்வியடைந்தார்.