/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
இரண்டாவது சுற்றில் அன்கிதா ரெய்னா
/
இரண்டாவது சுற்றில் அன்கிதா ரெய்னா
ADDED : டிச 17, 2024 11:25 PM

நவி மும்பை: ஐ.டி.எப்., டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா, ராஷ்மிகா வெற்றி பெற்றனர்.
இந்தியாவில் (நவி மும்பை) பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் அன்கிதா ரெய்னா, கிரீசின் வாலன்டினியை சந்தித்தார். 2 மணி நேரம், 3 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா, 1-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தாய்லாந்தின் பன்யவாவை 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சஹாஜா, ஜப்பானின் குவாடா ஜோடியை 6-3, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தது.