/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மயாமி ஓபன்: சபலென்கா சாம்பியன்
/
மயாமி ஓபன்: சபலென்கா சாம்பியன்
ADDED : மார் 30, 2025 06:45 PM

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் பெலாரசின் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் புளோரிடாவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 4வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய சபலென்கா, 2வது செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 28 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். ஒட்டுமொத்தமாக 19வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பட்டம் வென்ற சபலென்கா, நடப்பு சீசனில் 2வது கோப்பை வென்றார்.