ADDED : மார் 17, 2024 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுடில்லியில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், கரண் சிங் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய ராமநாதன், இரண்டாவது செட்டையும் 6-2 என வென்றார். முடிவில் ராம்குமார் ராமநாதன் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, ஐ.டி.எப்., ஒற்றையர் பிரிவில் ராமநாதன் கைப்பற்றிய 18வது பட்டம்.

