ADDED : மார் 17, 2024 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்துார்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா 2வது இடம் பிடித்தார்.
இந்துாரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, செக்குடியரசின் தலிலா ஜகுபோவிச் மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த ராஷ்மிகா, இரண்டாவது செட்டை 2-6 எனக் கோட்டைவிட்டார்.
முடிவில் ராஷ்மிகா 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.இத்தொடரில் இரட்டையரில் ராஷ்மிகா, வைதேகி ஜோடி கோப்பை வென்றிருந்தது.

