ADDED : மே 08, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்காவில்லா: ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் பெய்ஜ்மான் ஜோடி முன்னேறியது.
இத்தாலியில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி பெய்ஜ்மான் ஜோடி, பிரான்சிட் டான் ஆடேட், லுாகா சான்செஸ் ஜோடியை எதிர்கொண்டது. 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய இந்தியா-ஜெர்மனி ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 எனஜ வென்றது.
ஒரு மணி நேரம், 25 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீராம் பாலாஜி, பெய்ஜ்மான் ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

