/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பைனலில் சுமித் நாகல்: சென்னை ஓபனில் முன்னேற்றம்
/
பைனலில் சுமித் நாகல்: சென்னை ஓபனில் முன்னேற்றம்
UPDATED : பிப் 10, 2024 10:02 PM
ADDED : பிப் 10, 2024 09:23 PM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.
சென்னையில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், செக்குடியரசின் டாலிபோர் ஸ்வர்சினா மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சுமித் நாகல், இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 55 நிமிடம் நீடித்த போட்டியில் சுமித் நாகல் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் லுாகா நார்டி, சீனதைபேயின் சுன்-ஹசி டிசெங் மோதினர். இதில் நார்டி 6-4, 4-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் நார்டி, சுமித் நாகல் மோதுகின்றனர்.