sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

சஹாஜா, மாயாவுக்கு அனுமதி * சென்னை ஓபன் டென்னிசில்...

/

சஹாஜா, மாயாவுக்கு அனுமதி * சென்னை ஓபன் டென்னிசில்...

சஹாஜா, மாயாவுக்கு அனுமதி * சென்னை ஓபன் டென்னிசில்...

சஹாஜா, மாயாவுக்கு அனுமதி * சென்னை ஓபன் டென்னிசில்...


ADDED : அக் 17, 2025 10:35 PM

Google News

ADDED : அக் 17, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை ஓபன் 'டபிள்யு.டி.ஏ., 250' டென்னிஸ் தொடர் மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் சென்னையில் நடக்க உள்ளது. வரும் அக். 27 முதல் நவ. 2 வரை நடக்கும் இத்தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளின் அந்தஸ்து ('ரேங்க்') வெளியானது. இரு குழந்தைகளுக்கு அம்மா, ஜெர்மனியின் டாட்ஜனா மரியாவுக்கு 'நம்பர்-1' அந்தஸ்து தரப்பட்டது. தவிர, நடப்பு சாம்பியன், செக் குடியரசின் 20 வயது லிண்டா புருக்விர்ட்டோவா, பைனலில் பங்கேற்ற போலந்தின் மாக்டா லினெட்டே, 2024 விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறிய, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற குரோஷியாவின் டோன்னா வெகிச் (நம்பர் 69) பங்கேற்கின்றனர்.

சிறப்பு அனுமதி

இந்தியா சார்பில் 16 வயது மாயா ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு') வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய கர்மான் கவுர் தண்டி, தற்போது தகுதிச்சுற்றில் பங்கேற்க உள்ளார்.

இரட்டையரில் மோனிகா (ருமேனியா), ஹன்டர் (ஆஸி.,) ஜோடிக்கு 'நம்பர்-1' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் அன்கிதா ரெய்னா-ராஷ்மிகா, ருடுஜா-ரியா ஜோடி களமிறங்குகிறது. இந்தியாவின் பிரார்த்தனா, அரியான்னேவுடன் (நெதர்லாந்து) இணைந்து பங்கேற்க உள்ளார்.






      Dinamalar
      Follow us