ADDED : ஏப் 19, 2024 10:01 PM

முனிக்: ஜெர்மனி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி முன்னேறியது.
ஜெர்மனியில் ஏ.டி.பி., சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், லுாகாஸ் மிட்லர் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 6-1 என மிகச் சுலபமாக கைப்பற்றிய இந்தியா-பிரான்ஸ் ஜோடி, 'டை பிரேக்கர்' நீடித்த இரண்டாவது செட்டை 6-7 என போராடி இழந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' எழுச்சி கண்ட பாம்ப்ரி ஜோடி 10-7 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தது. ஒரு மணி நேரம், 32 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய யூகி பாம்ப்ரி, அல்பானோ ஜோடி 6-1, 6-7, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

