/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
மரத்தில் கார் மோதல்: சென்னையை சேர்ந்த தந்தை, மகன் பரிதாப பலி
/
மரத்தில் கார் மோதல்: சென்னையை சேர்ந்த தந்தை, மகன் பரிதாப பலி
மரத்தில் கார் மோதல்: சென்னையை சேர்ந்த தந்தை, மகன் பரிதாப பலி
மரத்தில் கார் மோதல்: சென்னையை சேர்ந்த தந்தை, மகன் பரிதாப பலி
ADDED : நவ 28, 2024 02:47 AM

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 56, கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தினருடன் சென்னை, வியாசர்பாடியில் வசித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் தன் மனைவி மாலதி, 50, மகன் விக்னேஷ், 30, மருமகள் ஜெயலட்சுமி, 26, ஆகியோருடன் அரியலுார் மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் வசிக்கும் தன் மகள் புனிதவள்ளி வீட்டுக்கு, 'மாருதி வேகன் ஆர்' காரில் வந்திருந்தார். தன் குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின், நேற்று புனிதவள்ளி, அவரது குழந்தைகள் தினேஷ், 8, சகானா, 6, ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு செல்வராஜ் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.
கார் மதியம், 12:30 மணிக்கு திருமானுார் அருகே உள்ள சத்திரத்தேரி பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதி நொறுங்கியது.
திருமானுார் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, பலத்த காயத்துடன் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
காரில் இடிபாடுகளுடன் சிக்கியிருந்த விக்னேஷ் உள்ளிட்டோரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே விக்னேஷ் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து, திருமானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சோகம்
கார் விபத்தில் இறந்த விக்னேஷுக்கு திருமணம் ஆகி, ஏழு நாட்கள் தான் ஆகிறது. விருந்துக்காக தங்கை வீட்டுக்கு வந்த போது, தந்தை ஓட்டி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இறந்தார். இந்த விபத்து, அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.