sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்

/

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கொன்ற தாய்


ADDED : மே 23, 2025 03:02 AM

Google News

ADDED : மே 23, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்:குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை, தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலுார் மாவட்டம், கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ், 49. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், ஒருவாரமாக, அரியலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

நேற்று முன்தினம், வேதியராஜை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற அவரது மனைவி, மகள் லாரா, 20, ஆகியோர் அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலையில் கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற லாரா, நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.

மருத்துவமனையில் துாய்மை பணியாளர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு லாரா ஆடையில் ரத்த கரையுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், திருமணமாகாத லாரா, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கழிப்பறைக்கு சென்றபோது, குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்னையாகி விடும் எனக்கருதி, அங்குள்ள கழிப்பறை பேஷனில், பிறந்த குழந்தையை அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

குழந்தையின் உடலை மீட்ட போலீசார், அப்பெண்ணிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us