sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்

/

செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : ஜூலை 12, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்கள்மற்றும் திறன் பயிற்சிஅளிக்கும் நிறுவனங்கள், நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்க உள்ளனர். விருப்பமுள்ளவர்கள், WWW.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முகாமில் 8, 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், - ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்திருக்க வேண்டும். மேலும், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மேலும், 18 - 40 வயது வரை உள்ளவர்கள், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், 19ம் தேதி காலை 10:00 - 2:00 மணி வரை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.

'வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது' எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு, 044- - 2742 6020 மற்றும் 94868 70577 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us