/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் அடிபட்டு 55 வயது நபர் பலி
/
ரயிலில் அடிபட்டு 55 வயது நபர் பலி
ADDED : ஆக 01, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, ரயிலில் அடிபட்டு, 55 வயது நபர் பலியானார்.
அச்சிறுபாக்கம், நெடுங்கல் பகுதி ரயில்வே கடவுப்பாதை அருகே, நேற்று முன்தினம் இரவு ரயில் சென்ற போது, 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளார்.
அப்போது, ரயிலின் சக்கரத்தில் சிக்கியதால் கால் துண்டாகி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், இறந்த நபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் குறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.